சேகர் ரெட்டி விவகாரத்தில் திருப்பம் : ஓபிஎஸ்-ஈபிஎஸ் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்..

சேகர் ரெட்டியின் டைரி விவகாரத்தில் அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் 12 பேர் உள்ளிட்ட 14 பேருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து, திமுகவில் இணைந்து தற்போது திமுக அமைச்சராக இருக்கும் செந்தில்பாலாஜிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.