“முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை…

ஆலோசனை!…
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (03.07.2023) முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். அரசின் முன்னெடுப்பு திட்டங்கள் ஆன முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் என்கிற பெயரில் ஏற்கனவே இது போன்ற கூட்டம் 5 முறை நடைபெற்றிருக்கிறது. இந்த நிலையில் இன்று (திங்கள்கிழமை) மீண்டும் 6வது ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள், பல்வேறு அரசுதுறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளன, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலைப்பாடுகள் என்ன?, விரைந்து முடிக்கப்படவேண்டிய திட்டங்கள் எவை?, பணிகளை துரிதப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 28ம் தேதி நடந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.