பாஜகவுக்கு எதிராக முழக்கமிடுவதா?: இளம் பெண்ணைப் பார்த்துக் கொந்தளித்த தமிழிசை

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழிசை சவுந்தரராசன் வருகையின் போது பாஜகவுக்கு எதிராக இளம்பெண் ஒருவர் முழக்கமிட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையிலிருது தூத்துக்குடி செல்லும் விமானத்தில் இன்று பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில்  அவரை பார்த்ததும் சோபியா என்ற பெண் பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து,  தமிழிசை சவுந்தர ராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், அங்கிருந்த போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார்.

விசாரணையில், கோஷமிட்டதாக சொல்லப்படும் அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா (23) என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்துள்ளது.

Tamilisai Soundararajan got into an argument with a co-passenger at Tuticorin airport