தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு…

தென் மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளார்.