தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

தமிழகத்தில் மேலும் புதியதாக 3,094 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,94,030-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 50 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,741-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 6,46,555- பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 36,734- பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.91 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 857 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 191754-ஆக அதிகரித்துள்ளது.