தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா பாதிப்பு : சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,224- ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், கரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கரோனாவில் இருந்து இதுவரை 4,172 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 634 பேர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 78-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மொத்தம் 12 மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 61 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 6,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 12,445 பேரின் சளி மாதிரிகள் பரிசோதித்ததில் 639 பேருக்கு தொற்று உறுதியானது.

சென்னை மிகவும் நெருக்கமான மாநகரம் என்பதால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 7,343 ஆண்கள், 3,878 பெண்கள், 3 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 482 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 6,750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.