தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கரோனா தொற்று :சுகாதாரத்துறை அறிவிப்பு..

தமிழகத்தில் மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 833 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,324- ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவால் இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 111-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு 7,839 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மட்டும் 587 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக அதிகரித்துள்ளது.

சென்னை மாநகரில் கரோனா பாதிப்பு விகிதம் 64.97 % ஆக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.