தமிழகத்தில் மேலும் புதியதாக 5,958 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 97-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 5,958 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 118 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 6,839 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவில் இருந்து இன்று 5,606 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,38,060-ஆக உயர்ந்துள்ளது

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 29-ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1,290 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,29,247-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவில் இருந்து 1,13,092 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் 2,638 பேர் உயிரிழந்துள்ளனர்.