தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரமாக உயர்வு

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 38-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 4,244 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் மேலும் 68 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,966-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 1168 கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 77,338-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 89-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் இன்று 3,617 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 89,532-ஆக அதிகரித்துள்ளது.

மதுரையில் ஒரே நாளில் கரோனாவிலிருந்து 787 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

இன்று புதிதாக 319 பேருக்கு கரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு 6,078 ஆக உயர்ந்துள்ளது.116 பேர் உயிரிழந்த நிலையில் 3,372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!