தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது : உச்சநீதிமன்றம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலை தள்ளிவைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

0உச்சநீதிமன்றத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. புனித வியாழன் அன்று வாக்குப்பதிவு நடைபெறுவதால் பிரார்த்தனைக்கு இடையூறு என மனுவில் வாதாடப்பட்டது. பல இடங்களில் தேவாலய வளாகத்தில் உள்ள பள்ளிகளில் வாக்குச் சாவடிகள் அமைந்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.