தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு..

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நிறுத்தப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது. இதற்கு பலர் அரசியல் கட்சிகள்,சமூக அமைப்புகள் தொடர்ந்த நடத்த கோரிக்கை விடுத்ததால் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.