தமிழகம் முழுவதும் 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடை மாற்றம்

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு, நுகர்வோர் பாதுகாப்பு செயலராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மருத்துவத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு. செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி,இராமநாதபுரம்,திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்ட ஆட்சியராக சாந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்