தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மேலும் 3509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 45 பேர் உயிரிழப்பு; இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911-ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று மட்டும் 1,834 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .
சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,650-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 2,236 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் . தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,999ஆக அதிகரித்துள்ளது.