தமிழகத்தில் ஒரே நாளில் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி …

தமிழகத்தில் மேலும் 5,395 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தினமும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

  • தமிழகத்தில் மேலும் 5,395 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,25,391-ஆக அதிகரித்துள்ளது.
  • தமிழகத்தில் கரோனாவில் இருந்து இதுவரை 5,69,664 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,572 பேர் குணமடைந்துள்ளனர்.
  • தமிழகத்தில் கரோனாவால் இன்று மேலும் 62 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,846-ஆக உயர்ந்துள்ளது.
  • சென்னையில் இன்று ஒரே நாளில் 1,367 பேர் கரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,74,143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை 77,82,736 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 82,725 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 189 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 45,881 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,77,541 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,256 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை கரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,47,819 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,139 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.
  • பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.