தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு –

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு வடக்கே வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி காரணமாக தமிழகத்தில் 16, 17, 18 ஆகிய நாட்களில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை பெய்யக் கூடும்.