தமிழக கோயில்களை கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

தமிழகத்தில் அறநிலையத்துறைக்கு கீழ் உள்ள கோயில்களின் நிகழ்வுகளை சிசிடிவி மூலம் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்த கட்டுப்பாட்டு அறைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது திறந்து வைத்துள்ளார்.இந்நசிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் அடிப்படை தேவைகளுக்காக ரூ. 23.81 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு குடிநீர் திட்டம், அன்னதானக் கூடம், மின்தூக்கி மற்றும் நாதமணி மண்டபம் ஆகியவற்றை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்