தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் : உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

தமிழக கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு விதிகள் செல்லும் எனவும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும்‌ என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.
ஆகம விதிப்படி உள்ள கோயில்களை ஆராய 5 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவில் தமிழக அரசு சார்பில் 2 பேரும்,அறநிலையத்துறை சார்பில் ஒருவரும் நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
அர்ச்சகர்கள் நியமன விதிகளை எதிர்த்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு கூறியுள்ளது.