பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள்: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை..

அறு படை வீடுகளில் 3-ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலில் திருமஞ்சன கட்டணம் பெறுவதற்கு பண்டாரங்களே தகுதியானவர்கள் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. கோயிலில் தொடக்கம் முதல் பண்டாரங்களே திருமஞ்சன நீரை எடுத்து வருவதாக ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது என நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.