தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பின் இன்றைய (அக். 4) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:
“தமிழகத்தில் இன்று புதிதாக 5,489 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,322 பேர், பெண்கள் 2,167 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 19 ஆயிரத்து 996 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 3 லட்சத்து 74 ஆயிரத்து 285 பேர். பெண்கள் 2 லட்சத்து 45 ஆயிரத்து 680 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 31 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 24 ஆயிரத்து 225 பேர். 13-60 வயதுடையவர்கள் 5 லட்சத்து 15 ஆயிரத்து 647 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 80 ஆயிரத்து 124 பேர்.

இன்று 86 ஆயிரத்து 12 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 77 லட்சத்து 11 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 84 ஆயிரத்து 159 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, இதுவரை 74 லட்சத்து 74 ஆயிரத்து 414 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 29 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 37 பேர் என, 66 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 9,784 ஆக உயர்ந்துள்ளது.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 6 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 60 பேர்.

இன்று 5,558 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 64 ஆயிரத்து 92 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வரை 46 ஆயிரத்து 120 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 123 என, 189 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னை நிலவரம்

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,348 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 72 ஆயிரத்து 773 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,374 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 57 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 3,274 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தற்போது வரை 12 ஆயிரத்து 283 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்”

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.