தமிழகத்தில் இன்று புதியதாக மேலும் 5,990 கரோனா தொற்று பாதிப்பு

தமிழகத்தில் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 4.39 லட்சத்தினை கடந்துள்ளது.

இன்று பரிசோதனை செய்யப்பட்ட 75,829 மாதிரிகளில் 5,990 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒட்டு மொத்த பாதிப்பு 4,39,959 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 5,891 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,80,063 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக 100க்கும் அதிகமான உயிரிழப்பு பதிவாகியிருந்த நிலையில் தற்போது உயிரிழப்பு 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 7,516 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 52,380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.