தஞ்சை தமிழ் பல்கலை துணைவேந்தர் நியமனம் செல்லாது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு..

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலசுப்பிரமணியனின் நியமனம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சாவூரைச் சேர்ந்த பேராசிரியர் ரவீந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றக் கிளை, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாலசுப்பிரமணியன் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் ஜி. பாலசுப்பிரமணியனை நியமனம் செய்து பல்கலைக்கழக வேந்தரும், ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்தார்.

உரிய தகுதி இல்லாத பாலசுப்பிரமணியன், விதிகளை மீறி துணைவேந்தராக நியிமிக்கப்பட்டதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில், துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.