‘தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது இராமநாதபுர மாவட்ட ஆட்சியர்.

பசும் பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் சமாதி

பசும் பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது என இராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர்-30 -ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த மற்றும் மறைந்த நாளாகும். வருடம் தோறும் அரசு தேவர் ஜெயந்தியாக கொண்டாடி வருகிறது.

இராமநாதபுர மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அவரின் சமாதியில் ஏராளமான பொது மக்கள் மற்றும்அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள்..

இந்தாண்டு கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் தேவர் ஜெயந்திக்கு அஞ்சலி செலுத்த பசும்பொன் வருபவர்கள் வாடகை வாகனங்களில் வரக்கூடாது இராமநாதபுர மாவட்ட ஆட்சியர். வீரராகவராவ் தெரிவித்துள்ளார்

அதேபோல் அஞ்சலி செலுத்தும் அரசியல் பிரபலங்கள் 26ம் தேதிக்குள் அனுமதி பெற வேண்டும்; 144 தடை அமலில் இருப்பதால் கூட்டமாக வரக்கூடாது!’ எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.