திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…

அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா நவ.8ந் தேதி காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

6 ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் வரும் 13-ந்தேதி செவ்வாய் கிழமை முக்கிய நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது.

கந்த சஷ்டி விழாவில் தினமும் ஜெயந்தி நாதர் , வள்ளி, தெய்வானை சமேதமாக தினமும் திருவீதியுலா விழா நடைபெற்று வந்தது.

இன்று மாலை 4மணி அளவில் சூரனை வதம் செய்யும் சம்கார விழா நடைபெறவுள்ளது.

விழாவைக்கான பல லட்சம் பக்தர்கள் திருச்செந்துாரில் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு பணிகளில் துாத்துக்குடி மாவட்ட காவல் துறை சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகிறது