தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு..

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச்“ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், முனுசாமி,சி.வி. சண்முகம்,திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி,தங்கமணி ஆகியோரும் உடனிருந்தனர்.