டோக்கியோ ஓலிம்பிக் : 1972ம் ஆண்டிற்கு பிறகு இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி..

டோக்கியோ ஓலிம்பிக் 1972ம் ஆண்டிற்கு பிறகு இந்திய ஆண்கள் ஆக்கி அணி அரையிறுதிக்கு தகுதி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்கில் பிரிட்டன் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் இந்திய ஆண்கள் ஆக்கி மோதியது. இதில் இந்திய அணி 3 – 1 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இதன் மூலம் 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியா ஒலிம்பிக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன் மூலம் வரும் 3ஆம் தேதி அன்று இந்திய ஆக்கி அணி ஆஸ்திரேலிய அணியுடன் விளையாட உள்ளது. அதில் வெற்றி பெற்றால் ஆக்கியில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகும்.