வாரணாசியில் மோடிக்கு எதிராக பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர்

வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய்ராய் என்பவர் போட்டியிடுகிறார். இவர்தான் கடந்த முறையும் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார்.

இந்தநிலையில், சமாஜ்வாடி வாரணாசி தொகுதியின் வேட்பாளரை மாற்றியுள்ளது. இந்த வாரணாசி தொகுதியில் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ வீரர் தேஜ் பஹதூர் சமாஜ்வாடி கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2017-ம் ஆண்டு, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவ வீரர்களுக்கு உணவு சரியாக வழங்கப்படுவதில்லை என்று குற்றம்சாட்டி ராணுவ வீரர் தேஜ்பஹதூர் வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

இந்த வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து, தேஜ்பஹதூர் ராணுவத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது, அவரை மோடிக்கு எதிராக சமாஜ்வாடி வேட்பாளராக அறிவித்துள்ளது.