வேல் யாத்திரைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு..

வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக டிஜிபி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு!செய்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் முருகன்நவ.6 முதல் டிசம்பர் 6 வரை திருத்தணி யிலிருந்து திருச்செந்துாருக்கு வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டார்.
சென்னைிலிருந்து திருத்தணிக்கு செல்ல போலீஸ் அனுமதி கொடுத்தது.திருத்தணியில் சாமி தரிசனம் செய்து விட்டு வேல் யாத்திரையை முருகன் தொடங்கினார்.
போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்.
இந்நிலையில் தமிழக பாஜக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு தாக்கல் செய்துள்ளது.
வேல்யாத்திரை தடையை நீக்கி யாத்திரை செல்ல அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இன்று மாலை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது