பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு..

நாளை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக தமிழக அரசு பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க தடை விதித்திருந்தது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுத்துள்ளது. ஊர்வலமாகவும் செல்ல தடை விதித்துள்ளது.

தமிழக அரசு விதித்த சட்டத்தை மதிக்க வேண்டும்.அதுபோல் சென்னை மெரினா கடற்கரையிலும் விநாயகர் சிலையைக் கரைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இல்லங்களில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை கடலில் கரைக்க அனுமதி வழங்கப்பட்டள்ளது.