இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் வலிமையாக்குவோம் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் டிவிட்..

இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் வலிமையாக்குவோம் தேசிய இளைஞர் தினமான சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் டிவிட்..செய்தள்ளார்

இளைஞர்களின் ஆற்றலைக் கொண்டு நாட்டையும் சமுதாயத்தையும் வலிமையாக்கிட முனைந்த சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் நாள் தேசிய இளைஞர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.


Image

இந்திய மக்கள் தொகையில் இளைஞர்களின் எண்ணிக்கை வலிமையானதாகும். அதனை மனிதவளமாகக் கொண்டு மாபெரும் மாற்றம் காணும் வகையில் இளைஞர்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட திறன்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். சமூகநீதியே அதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கும். மதநெறி ஒருபோதும் மதவெறியாகக் கூடாது என்பதை வலியுறுத்திய சுவாமி விவேகானந்தரின் முற்போக்கு கருத்துகளுடன் இளைய சமுதாயம் சிகரங்களை எட்டட்டும்