காற்றழுத்த தாழ்வுநிலை: கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..

தமிழகம்,புதுவையில் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியதையடுத்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்தகாற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடலோர மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.