தமிழகத்தில் ஒரே நாளில் 2,174 பேருக்கு கரோனா தொற்று..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50,193 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 576 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் இன்று மேலும் 2,174 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 80 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 50,193 ஆக உயர்ந்துள்ளது.

79 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 25,463 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய தேதி வரையில் தமிழகத்தில் 7,37,787 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.

இன்று சென்னையில் 40 பேரும், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் தலா 2 பேரும், திருவள்ளூர், திண்டுக்கல், விழுப்புரம், மதுரையில் தலா ஒருவரும் என மொத்தம் 48 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 397 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய உயிரிழப்புகளில் 38 பேர் அரசு மருத்துவமனையிலும், 10 பேர் தனியார் மருத்துவமனையிலும் பலியாகியுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 842 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 27,624 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 21,990 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 2,533 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 41,742 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 5,918 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.