தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி..


தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி, மேற்கு வங்காளம், தமிழ்நாடு, ஜம்மு காஷ்மீர், உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் அயுக்தா அமைக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் 12 மாநில தலைமை செயலாளர்களும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.