தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது வழக்குப்பதிவு..


தலைமை நீதிபதி குறித்து முகநூலில் அவதூறு பரப்பியவர் மீது உயர்நீதிமன்ற காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கூடுதல் வழக்கறிஞர் ராஜகோபாலன் அளித்த புகாரின் பேரில் அவதூறு செய்தி வெளியிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியை முகநூலில் விமர்சித்ததாக புகார் பெறப்பட்டுள்ளது.