தேமுதிக மாநாடு ஒத்திவைப்பு…


திருப்பூரில் நடக்க இருந்த தேமுதிக மாநாடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைமை செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 4ம் தேதி நடந்தது. இதில் செப்டம்பர் 16ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் மாநாடு நடத்தப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது, மாநாடு தள்ளிவைக்கப்படுகிறது. தேதி பின்னர் தலைமை கழகத்தில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.