“தொழிலதிபர்கள் மட்டுமல்ல, தொழிலாளர்களும் வளரும் ஊர் திருப்பூர்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

திருப்பூர் தொழிலதிபர்கள் வளரும் ஊராக மட்டுமின்றி தொழிலாளர்கள் வளரும் ஊராக உள்ளதாக முல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருப்பூர் பல்வேறு தொழில்களில் முன்னேறி வருகிறது எனவும், திருப்பூரை போன்று மற்ற மாவட்டங்களும் மாற வேண்டும் என்பது எனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
திஜருப்பூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,தமிழக அரசு மேற்கொண்டுள்ள 221 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.2.2 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ திருப்பூர் மண்டல மாநாட்டில், கயிறு உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழில் முனைவோர்களுக்கு மானிய உதவிகளை மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.