போடாதா சாலைக்கு பில்போட்டு கொள்ளையடித்த அதிமுக ஒப்பந்தகாரர் ..

கிணற்றைக்காணோம் என்ற வடிவேலுவின் காமெடி போல் போடாத சாலைக்கு சாலை போட்டதாக பில் போட்டு கொள்ளையடித்தது அம்பலமாகிவுள்ளது.

விருதுநகர் அருகே போடாத சாலைக்கு போடப்பட்டதாக கணக்கு காட்டி கொள்ளையடித்தது தற்போது தகவல் உரிமை சட்டத்தால் தற்போது தெரியவந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் வெள்ளுர் அருகே உள்ள அம்மன் கோவில்பட்டி மற்றும் மேலமாத்துார் இடையே 8 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி கோரி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்காக அரசு சார்பில் 2012 ஆம் ஆண்ட அம்மன் கோயில்பட்டி பகுதிக்கு ரூ.4,80,000 மற்றும் மேலமாத்துார் பகுதிக்கு ரூபாய் 3,50,000 மதிப்பீட்டில் தனியாரிடம் ஒப்பந்தம் விடப்பட்டது.
ஆனால் இன்று வரை சாலை போடவேயில்லை. இந்நிலையில் தகவல் உரிமை சட்டத்தில் கேட்டபோது சாலை போடப்பட்டதாக கணக்கை காட்டி பில் போட்டு தொகையை கொள்ளையடித்துள்ளனர்.

இது குறித்து விசாரித்த போது ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒப்பந்தாரர் என்பது குறிப்பிடத்தக்கது.