பேரறிவாளன் கருணை மனு ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

பேரறிவாளன் கருணை மனு மீது தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பேரறிவாளன் கருணை மனு மீது 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், கருணை மனு விவகாரத்தில் ஆளுநர் ஏன் தாமதப்படுத்துகிறார்? ஆளுநருக்கு ஆலோசனை வழங்கக்கூடாதா? தமிழக அரசு என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.