ரூ.125 மதிப்பிலான நாணயம் : அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்..

டெல்லியில் பரமஹன்ச யோகானந்தாவின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.125 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார் .

இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு தியானம் மற்றும் கிரியா யோகாவை அறிமுகப்படுத்திய குருவாக திகழ்பவர் பரமஹன்ச யோகானந்தா.

இவர் கடந்த 1893ம் ஆண்டு பிறந்த இவரது 125வது பிறந்த தினம் 2018ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அவரது நினைவாக ரூ.125 மதிப்புள்ள சிறப்பு நினைவு நாணயம் ஒன்றை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணை அமைச்சர் அனுராக் தாகூர் உடனிருந்தார்.