ஊரடங்கை மே-17 வரை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்..

வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலி யாக
மே 17 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்! வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக உயர்வடைந்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நேற்று 775 ஆக உயர்வடைந்து இருந்தது.

5,063 பேர் குணமடைந்தும், 18,668 பேர் தொடர் சிகிச்சையிலும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 24,506 ஆக உயர்வடைந்து இருந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா பாதிப்புக்கு பலி எண்ணிக்கை இன்று 824 ஆக உயர்வடைந்து உள்ளது.
இந்நிலையில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் எதிரொலி யாக
மே- 17 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்! தெரிவிக்கிறது.