தமிழகத்தில் ஏப்ரல் 30-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..

கொரோனா தொற்று அபாயத்தால் தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 30-ந்தெதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் எனவும் அனைத்து ரேசன் அட்டைகளுக்கும் மே மாதம் முழுவதும் இலவசப் பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.