18-வது ஆசிய விளையாட்டு போட்டி: கோலாகலமாக தொடங்கியது..


இந்தோனேஷியத் தலைநகர் ஜகர்த்தாவில் இன்று 18 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கியுள்ளன. வண்ண மயமான கலை நிகழ்சிகளுடன் போட்டிகள் தொடங்கின.

இன்றைய தொடக்க விழா அணிவகுப்பில் இளம் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா மூவர்ண கொடி ஏந்தி வரவுள்ளார்ஃ
36 வகையான போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியில் 277 வீரர்கள், 247 வீராங்கனைகள் உட்பட 524 பேர் இடம் பிடித்துள்ளனர்.

அதிகபட்சமாக தடகளப் போட்டிகளில் கலந்துகொள்ள 52 பேர் உள்ளனர்.