45-வது சென்னை புத்தகக் கண்காட்சி :ஜன., 6-ம் தேதி தொடங்குகிறது

45-வது சென்னை புத்தகக்கண்காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கு ஏற்றி புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். ஆண்டுதோறும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் புத்தக திருவிழா வரும் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை நடைபெறுகிறது.
வாரநாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும் எனவும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக்காட்சியில் மாணவர்களுக்கு அனுமதி இலவசம்; மற்றவர்களுக்கு 10 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.