அதிமுக (ஒபிஎஸ்) சிவகங்கை மாவட்ட செயலாளர் கே.ஆர். அசோகனுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு…

அதிமுக சிவகங்கை மாவட்ட செயலாளராக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தால் நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகன் அவர்களுக்கு காரைக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிதாக சிவகங்கை மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள கே.ஆர்.அசோகன் இன்று விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வந்து மதுரையிலிருந்து கார் மூலம் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தார்.அவருக்கு பூவந்தி அருகே அதிமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.அதனைத் தொடர்ந்து சிவகங்கை,திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் அதிமுக தொண்டர்கள் திரளாக திரண்டு வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்பு காரைக்குடிக்கு வந்த அதிமுக புதிய மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகனுக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் பாலா,இளைஞர் அணி திருஞானம்,காரைக்குடி நகர மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அங்கு ராஜ் ,ரவி, மகளிர் அணி ராமாமிர்தம், பத்மா, சாந்தி,இளைஞர் அணி காட்டு ராஜா, பக்கீர் முகமது, கண்ணதாசன், சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .இதில் செய்தி தொடர்பாளர் மருது அழகராஜ்,வழக்கறிஞர் ராமனாதன்,மாணவரணி ஆசைத்தம்பி, சுமித்ரா ரவிக்குமார் உள்பட கழக நிர்வாகிகள்,தொண்டர்கள்,மகளிரணியினர் திரளாக பங்கேற்றனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்