அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம்

அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பாக ஜூலை 12ம் தேதிக்குள் சபாநாயகர் தனபால் விளக்கமிக்கவும் நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.