அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம்…

சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார்.

சி.பி.ஐ. இயக்குநா் அலோக் வர்மாவும், சி.பி.ஐ. சிறப்பு இயக்குநா் ராகேஷ் அஸ்தானாவும் பரஸ்பரம் ஒருவா் மீது ஒருவா் குற்றம்சாட்டி வந்தனா்.

இதனைத் தொடா்ந்து இவா்கள் இவருவா் மீதும் மத்திய அரசு விசாரணை மேற்கொண்டது. லஞ்சப் புகார்களைத் தொடா்ந்து இவா்கள் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி மத்திய அரசு உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமா்வு இந்த வழக்கை விசாரணை மேற்கொண்டது.

இந்த வழக்கில் “அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறான ஒன்று. இந்த விவகாரத்தில் அரசின் நடவடிக்கையை ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.”

இந்நிலையில்,சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே சிபிஐ இயக்குனரை தேர்வு செய்யும் குழுவில் இருந்து ரஞ்சன் கோகாய் விலகினார்.

தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அலோக் வர்மாவை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அலாக் வர்மா, சிபிஐ இயக்குனர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக அந்த பொறுப்புகளை சிபிஐ துணைஇயக்குனர் நாகேஷ் ராவ் கவனிப்பார்.

புதிய சிபிஐ இயக்குனர் நியமிக்கும் வரையில் நாகேஷ் ராவ்க்கு இந்த கூடுதல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ இயக்குனர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா, தீயணைப்புத்துறை மற்றும் ஊர்காவல்படை இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தின் பரிந்துரையை ஏற்று, ஊழல் கண்காணிப்பு குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியதைத் தொடா்ந்து சி.பி.ஐ. இணை இயக்குநா் நாகேஸ்வர ராவ் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னா் தனது கட்டாய விடுப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிராக நடைபெற்றுள்ள அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்நதார்