உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: தொடங்கி வைத்தார் முதல்வர்..


உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைத் தொடங்கி முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. சென்ற ஆண்டு நடைபெற்ற போராட்டத்திற்குப் பிறகு, ஜல்லிக்கட்டு மீதான ஆர்வம் அதிகமாகி உள்ளதால், தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தப் போட்டிகளைத் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும், பல அமைச்சர்கள் ஜல்லிக்கட்டை காண அங்கு வருகை புரிந்துள்ளனர்.

இந்தச் ஜல்லிக்கட்டு போட்டிகளில் சுமார் 1000 காளைகளும், 1241 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர். இதில் சிறப்பாக விளையாடும் மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு கார், பைக், தங்க நாணயங்கள் வழங்கப்பட உள்ளன. இதனிடையே, அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க காளைகள் மற்றும் வீரர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.