அமெரிக்க துப்பாக்கி சூட்டில் பல குழந்தைகளை காப்பாற்றிய ஆசிரியை சாந்தி..


அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பேர் பலியாகினர். இந்த துப்பாக்கி சூட்டின் போது ஆசிரியை பணியில் இருந்த தமிழகத்தை சேர்ந்த சாந்தி, வகுப்பில் இருந்த குழந்தைகளை டெஸ்க் மற்றும் பெஞ்சுகளுக்கு அடியே பதுங்கச் செய்தார். இதனால் அந்த வகுப்பு குழந்தைகள் துப்பாக்கி சூட்டில் இருந்து தப்பித்துக்கொண்டனர்.