பாபா ராம்தேவ் கேட்ட நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..

பதஞ்சலி மருந்துகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் விளம்பரங்கள் தயாரித்த விவகாரத்தில் பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார்

மன்னிப்பு என்ற பெயரில் எதையாவது எழுதி கொடுத்துவிட்டு தப்பித்து விடலாம் என நினைக்காதீர்கள் என பாபா ராம்தேவ் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நீங்கள் செய்திருப்பது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு எனவும் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.