பாபர் மசூதி வழக்கில் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி : உச்சநீதிமன்றம் அதிரடி..

பாபர் மசூதி வழக்கில் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இஸ்லாமின் முக்கிய அம்சம் மசூதி அல்ல என்று 1994-ல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இவ்வழக்கு அக்.29-ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அயோத்தி நிலப் பிரச்சனை வழக்கு 7 நீதிபதி அமர்வுக்கு அனுப்பப்படமாட்டாது.