பத்துமலை ‘தை’ பூச திருவிழா : பக்தர்கள் இன்றி வெள்ளிரதம் புறப்பாடு..

பத்துமலை முருகன் கோயிலுக்கு தை பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி மகா மாரியம்மன் கோயிலிலிருந்து வெள்ளிரதம்

உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போதை கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி தை பூச திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோயிலுக்கு தை பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் இன்றி மகா மாரியம்மன் கோயிலிலிருந்து வெள்ளிரதம் புறப்பட்டது.

அதிகாலை 3 மணிக்கு பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை வெள்ளி ரதம் அலங்கரிக்கப்பட்டு பத்து மலை நோக்கி முக்கிய சாலைகள் வழியாக புறப்பட்டுச் சென்றது. வழியிலும் பக்தர்கள் ரதத்தைக் காண அனுமதிக்கப்படவில்லை.